Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சங்க தேர்தல்: நாசர், கார்த்தி, விஷால் வேட்புமனு தாக்கல்- சரத் அணிக்கு எதிராக களமிறங்கியது!!
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். முன்னதாக விஷால் தலைமையிலான அணியினர் கலைவாணர் சிலை மற்றும் எம்ஜிஆர் சமாதி ஆகிய இடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் சங்க தேர்தல் வருகிற 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தி.நகர் அபிபுல்லா சாலையில் பழைய நடிகர் சங்க கட்டிடம் அருகே உள்ள அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் சரத்குமார் நேற்று காலை தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அவரது அணியினரும் சென்றிருந்தனர்.
நடிகர் சங்கத் தேர்தலில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக விஷால் தலைமையிலான அணியினர் இன்று காலை சுமார் 7 மணியளவில் தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டிற்கு சென்று அங்குள்ள கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் சுமார் 7.30 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று அவரது நினைவிடத்தில் மாலைகள் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னரே விஷால் அணியினர் இன்று காலை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். தலைவர் பதவிக்கு நாசர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 24 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வேலையில் விஷால் அணியினர் தீவிரமாக ஈடுபட உள்ளனர். இரண்டு அணியினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருப்பதால் தற்போது நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன், குஷ்பூ, விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் தங்கள் ஆதரவை விஷால் அணியினருக்கு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் 4-ந்தேதி (ஞாயிறு) காலை பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.