Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசனுடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டட நிதிக்காக நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 17-ல் நடைபெற உள்ளது.
சென்ற மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றபோது பேசிய விஷால், "சங்க வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணி தொடங்கியுள்ளது. இதற்கான நிதியை பல வகைகளில் திரட்ட முடிவு எடுத்துள்ளோம். முதல் கட்ட நிதிக்காக வரும் ஏப்ரல் 10-ல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் ஒட்டுமொத்த திரைத்துரையினரும் பங்கேற்க உள்ளனர்," என்று கூறினார்.
இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் என். சீனிவாசனை, நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள்.
அதன்படி கிரிக்கெட் போட்டி நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 17 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.