For Daily Alerts
Don't Miss!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Technology தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகர் சங்கத்துக்கு 2 மாதங்களில் தேர்தல் - நீதிமன்றம் உத்தரவு
News
oi-Shankar
By Shankar
|
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரத்குமார் தலைவராகவும், ராதாரவி பொதுச் செயலாளராகவும் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விஷால் தரப்பினர் இந்தத் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலை 2 மாதங்களில் நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமனம் செய்தது.
வரும் தேர்தலில் சரத்குமார், ராதாரவி தலைமையிலானவர்கள் ஒரு அணியாகவும், விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் எதிர் அணியாகவும் நின்று சந்திக்கவிருக்கிறார்கள்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
The Madras High Court has ordered to conduct election for Nadigar Sangam within 2 months.
Story first published: Tuesday, July 28, 2015, 18:34 [IST]
Other articles published on Jul 28, 2015