Don't Miss!
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Technology இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
- News உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. ஏற்றுமதி செய்ய போகும் ராணிப்பேட்டை.. ஆட்டோமொபைல் புரட்சி
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சங்க நிலத்தை விற்று பணம் கையாடல்: சரத்குமார், ராதாரவி மீது வழக்கு
Recommended Video
காஞ்சிபுரம்: நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலைத்தை விற்று பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 29 சென்ட் நிலம் இருந்தது. நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, முன்னாள் செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.செல்வராஜ், முன்னாள் மேலாளர் நடேசன் ஆகியோர் அந்த நிலத்தை கடந்த 2006ம் ஆண்டு முறைகேடாக விற்று பணத்தை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் விஷால் குற்றம் சாட்டினார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகாரும் அளித்தார். ஆனால் அவர் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
விஷாலின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் கூறியுள்ள புகாரில் முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சரத்குமார், ராதாரவி, கே.ஆர்.செல்வராஜ், நடேசன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.