Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்: 20 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தின்போது மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் நிர்வாகிகள் சிலரின் ஆதரவாளர்கள் அழைப்பிதழ் இல்லாமல் கூட்டத்திற்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. நிலைமை கையை மீறிச் சென்றதும் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதற்கிடையே மைதானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது குறித்து கருணாஸின் கார் டிரைவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மோதல் குறித்து நடிகர் ஜே.கே. ரித்திஷ் சார்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பை சேர்ந்த 20 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.