Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்: 20 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தின்போது மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் நிர்வாகிகள் சிலரின் ஆதரவாளர்கள் அழைப்பிதழ் இல்லாமல் கூட்டத்திற்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. நிலைமை கையை மீறிச் சென்றதும் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதற்கிடையே மைதானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது குறித்து கருணாஸின் கார் டிரைவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மோதல் குறித்து நடிகர் ஜே.கே. ரித்திஷ் சார்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பை சேர்ந்த 20 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.