Don't Miss!
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நடிகர் சங்கத்தில் ஒரே ஆண்டில் ரூ 3 கோடி ஊழல்... விஷால், நாசர் மீது பரபர குற்றச்சாட்டு!
சென்னை: நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே ரூ 3 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் மீது நடிகரும் பத்திரிகையாளருமான வாராகி என்பவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து நடிகர் சங்கம் வாராகிக்கு நோட்டீஸ் அனுப்பி, நேரில் வந்து விளக்கம் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் நேரில் சென்றபோது சங்க நிர்வாகிகள் யாருமில்லாததால் திரும்பிவிட்டாராம்.
இதுகுறித்து வாராகி கூறுகையில், "இந்த சங்கத்தின் தேர்தலில் விஷால் அணிக்கு நானும் வாக்களித்தேன்.
ஆரம்பத்திலிருந்தே சங்கத்தின் நடவடிக்கைகள் சரியில்லை. முன்பு இருந்த நிர்வாகம் செய்த ஊழலை விட இருமடங்கு இந்த புதிய நிர்வாகம் செய்திருக்கிறது.
நட்சத்திர கிரிக்கெட் நடத்த ரூ 13 கோடியை சன் டிவி கொடுத்தது. அதில் இப்போது 7 கோடிதான் இருப்பதாகக் கணக்கு காட்டுகிறார்கள் விஷால் தரப்பினர். 3 கோடி கிரிக்கெட் நடத்த செலவாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். மீதி 3 கோடிக்குக் கணக்கு இல்லை. கேட்டால் மிரட்டுகிறார்கள். இதுவரை சரியான பதில் இல்லை. நான் இதுகுறித்து சட்டப் போராட்டத்தில் இறங்கப் போகிறேன்," என்றார்.
வாராகியின் புகார் குறித்து நடிகர் சங்கத் தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை.