எங்க பொதுக் குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு வேணும்!- நடிகர் சங்கம்
சென்னை : நடிகர் சங்கப் பொதுக் குழுவுக்கு போதிய பாதுகாப்பு தருமாறு சென்னை போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் சங்கத்தின் துணைத் தலைவர் நடிகர் பொன்வண்ணன்.

நடிகர் சங்கப் பொதுக் குழுக் கூட்டம் வரும் நவம்பர் 29-ம் தேதி லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

இந்தக் கூட்டத்துக்கு எதிர்த்தரப்பினரால் தொந்தரவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சங்க பொன்வண்ணன் மற்றும் பொருளாளர் கார்த்திக் நேரில் சென்று மனு அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











