Don't Miss!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
என்னது 2வது திருமணமா? … ப்ளீஸ் வதந்திகளை பரப்பாதீர்கள்… நாகசைதன்யா விளக்கம் !
சென்னை : தெலுங்கு நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்து உரிய விளக்கம் அளித்துள்ளார்
திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சமந்தாவும் நாகசைத்தன்யாவும் பிரிந்தது. திரைத்துறைக்கு மட்டுமல்ல அவர்களது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நாகசைதன்யாவின் 2வது திருமணம் குறித்த பேச்சு டோலிவுட்டில் அடிபட்டு வருவதால், இனி இவர்கள் சேரவே வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.
ரூ. 5 கோடி பணத்தை தராமல் ஏமாத்திட்டாரு.. நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்!
காதலித்தனர்
நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான 'யே மாய சேசாவே' படத்தின் இணைந்து நடித்திருந்தனர். முதல் படத்திலிருந்த இவர் இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறினார் சமந்தா.
மனக்கசப்பு
இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து டாப் நடிகைகள் பட்டியலில் இருந்தார் சமந்தா. இதையடுத்து, சமந்தாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யாவின் குடும்ப பெயரை எடுத்துவிட்டு வெறும் 'S' என்று மட்டும் பதிவிட்டதால். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பு வெளியே தெரியத் தொடங்கியது.
பிரிந்தனர்
இவை அனைத்தும் வெறும் வதந்திதான் என்று நினைத்து வந்த நேரத்தில் கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இவர்களது பிரிவு ரசிகர்களை மட்டுமில்லாது திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், திருமண புடவையை நாகசைதன்யா குடும்பத்திற்கே திரும்பி அனுப்பி அதிர்ச்சியை கொடுத்தார் சமந்தா.
2வது திருமணம்
இதையடுத்து, நாகசைதன்யா 2வது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், சினிமாவில் இருப்பவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றும் இதனால் பெண் பார்க்கும் படலத்தை அவரின் பெற்றோர்கள் தொடங்கிவிட்டதாக இணையத்தில் தகவல்கள் காட்டுத் தீ போலபரவி வந்தது.
உண்மை இல்லை
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாகசைதன்யா இது உண்மை இல்லை என்றும், சமந்தாவும் நானும் இன்னும் சட்டப்பூர்வமாக பிரியவில்லை என்றும் அதற்குள் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக வதந்தி பரப்புவது வருத்தத்தை அளிப்பதாகவும், தயவு செய்தி வதந்திகளை பரப்பாதீர்கள் என்றும் நாகசைதன்யா கூறியுள்ளார்.