Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படம் பிளாப், திருமணமும் நின்றுவிட்டது: மகனை நினைத்து கவலையில் நடிகர்
ஹைதராபாத்: தங்கள் மகன் அகிலின் திருமணம் நின்றுவிட்டதை நினைத்து நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதி கவலையில் உள்ளார்களாம்.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகிலுக்கும், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் திருமணம் திடீர் என்று நின்றுவிட்டது.
காதல் முறிவு
அகிலும், ஸ்ரேயாவும் சில ஆண்டுகள் காதலித்தனர். இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டதாம். திருமண ஏற்பாட்டின்போது இருவீட்டார் இடையே ஏற்பட்ட பிரச்சனையும் திருமணம் நிற்க காரணமாம்.
அகில்
குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் படத்தில் அறிமுகமான அகில் தனது பெயர் கொண்ட படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை.
கவலை
அகிலின் சினிமா வாழ்க்கை ஒரு புறம் மோசமாக இருக்கும் நிலையில் அவரின் திருமணமும் நின்றுள்ளது நாகர்ஜுனா, அமலாவை கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.
சண்டை
அகில் மற்றும் ஸ்ரேயா ஹைதராபாத் விமான நிலையத்தில் வைத்து சண்டை போட்டார்களாம். அங்கு தான் முதலில் பிரச்சனை ஏற்பட்டதாக தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.