Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சமந்தா தான் விவகாரத்தை விரும்பினார்.. முற்றிலும் பொய்யான செய்தி.. ட்விட்டரில் கொதித்த நாகார்ஜுனா!
சென்னை : சமந்தா தான் விவகாரத்தை விரும்பினார் என்று நாகார்ஜுனா கூறியதாக இணையத்தில் வெளியாகி உள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என நாகார்ஜுனா கூறியுள்ளார்.
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் தங்கள் திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்து பிரிந்தனர்.
54 வயதில் 5 முறை விவாகரத்து செய்த பிரபல நடிகை... ஷாக்கான ரசிகர்கள்
இவர்கள் பிரிந்ததற்கான காரணம் குறித்து இணையத்தில் பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் சம்மந்தப்பட்ட இருவரும் விவாகரத்துக்கான காரணத்தை இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை.
பிரிந்தனர்
நாகசைதன்யா, சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 4 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேருமே தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
விவகாரத்தை சமந்தா விரும்பினார்
இந்த நிலையில் நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா, முதல்முறையாக மனம் திறந்து ஒரு பேட்டி அளித்துள்ளதாக பரபரப்பான செய்தி வெளியானது. அதில், நாகசைதன்யா, சமந்தா விவகாரத்தில் எல்லாம் தந்தைகளைப் போலவே நானும் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் எனது மகனோ எங்களை நினைத்து கவலைப்பட்டார். ஆனால், விவாகரத்து முடிவு முழுக்க முழுக்க சமந்தாவினால் எடுக்கப்பட்டது என்றும், அவர்தான் விவாகரத்தை விரும்பினார் என்றும் நாகார்ஜுனா கூறினார்.
நாக சைதன்யா கவலைப்பட்டார்
அந்த முடிவை நாக சைதன்யா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அப்பாவாகிய தன்னைப் பற்றியும், நான் என்ன நினைப்பேன், குடும்பத்தின் நற்பெயர் என்னவாகும் என்பது குறித்தும் அவர் மிகவும் கவலைப்பட்டதாகவும், நான் கவலைப்படுவேன் என நினைத்து நாக சைதன்யா கவலை அடைந்ததாக நாகார்ஜூனா கூறியதாக செய்திகள் வெளியாகின.
Recommended Video
வதந்தியை பரப்பாதீர்கள்
இதையடுத்து, நாகார்ஜூனா, தனது ட்விட்டர் பக்கத்தில், சமந்தா, நாக சைத்தன்யா விவாகரத்து குறித்து எந்த ஒரு பேட்டியும் நான் கொடுக்கவில்லை, நான் கூறியதாக ஊடகங்களிலும், சமூகவலைத்தளத்திலும் பரவும் செய்து முற்றிலும் முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என நாகார்ஜூனா கூறியுள்ளார்.