மகனை பார்த்து பொறாமைப்படும் சமந்தா மாமனார்
ஹைதராபாத்: மகன் நாகசைதன்யாவை பார்த்து பொறாமைப்படுவதாக நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் சமந்தா மட்டும் அல்ல அவரின் கணவர் நாகசைதன்யாவும் நடித்துள்ளார். நாக சைதன்யா தனது தாத்தாவான நாகேஸ்வர ராவாக நடித்துள்ளார்.

மகாநதி படத்தை பார்த்த தெலுங்கு திரையுலக பிரபலங்கள் படம் சூப்பர் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தை பார்த்த நாகர்ஜுனா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தந்தையாக பெருமையாக உள்ளது, மகனாக பொறாமையாக உள்ளது. நான் என் தந்தை ஏ.என்.ஆர். காருவாக நடித்தது இல்லை. மகாநதியில் நாகசைதன்யா ஏ.என்.ஆர். காருவாக நடித்துள்ளார் என்று ட்வீட்டியுள்ளார்.
மகாநதி படத்தில் சமந்தா பத்திரிகையாளராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











