கல்கண்டில் கதாநாயகனாகும் நாகேஷ் பேரன் கஜேஷ்
கல்கண்டு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ்.
'ராட்டினம்' படத்தை தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

கதாநாயகியாக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டிம்பிள் சோப்டே அறிமுகமாகிறார். டி.பி.கஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், முத்துராமன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மதன் கார்க்கி, விவேகா, யுகபாரதி, அண்ணாமலை ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு கண்ணன் இசையமைக்கிறார். கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏ.எம்.நந்தகுமார் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். இவர், 'தென்னவன்,' 'ஜாம்பவான்' ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப் படம் குறித்து அவர் கூறுகையில், "இது, ஒரு கவித்துவமான காதல் கதை. இளைஞர்களுக்கு ரொம்பப் பிடிக்கும்,' என்றார்.


Click it and Unblock the Notifications











