Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாகேஷ் வாரிசு உணர்ச்சிகள் பொங்க பேச ஆரம்பித்து உள்ளார்
சென்னை: தமிழ் திரையுலகில் நகைச்சுவை ஜாம்பவான்களில் ஒருவரான நாகேஷ் அவர்களின் மகன் தான் ஆனந்த் பாபு . இவர் தன் தந்தையை போல நகைச்சுவை நடிகராக இல்லாமல் ஹீரோவாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.
1980களில் ஹீரோக்களில் நடனத்தில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கியவர் ஆனந்த் பாபு . தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என வேறு மொழிகளிலும் நடித்திருக்கிறார். அவர் நடித்த பல படங்களில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
புது வசந்தம் சேரன்பாண்டியன், சிகரம் , வானமே எல்லை போன்ற பல வெற்றிப்படங்களில் நடுத்திருக்கிறார் நடிகர் ஆனந்த் பாபு.
பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் தன்னால் நீண்டகாலம் முன்னணி நடிகனாக நிலைத்து நிற்க முடியவில்லை. சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த நடிகர் ஆனந்த் பாபு அவர்கள். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் தன் பயணத்தை தொடங்கினார்.
முன்னணி தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் நடித்திருந்தார் நடிகர் ஆனந்த் பாபு. ஆனால் அவையாவும் மக்கள் மனதில் பெரிதாக இடம் பிடிக்கவில்லை. இப்பொழுது விஜய் டிவியில் அவர் நடிக்கும் மௌனராகம் தொடரில் காதம்பரியின் தந்தையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
'அதுக்காக ஒழுக்கம் கெட்ட பெண்ணானாலும் பரவாயில்ல'.. கவர்ச்சி போட்டோவுடன் சிவா பட நடிகை சர்ச்சை பதிவு!
ஒரு தந்தையாக தன் மகள் செய்த குற்றத்தை தானே செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்கிறார் . ஒரு தந்தையாக தன்னுடைய உணர்வுபூர்வமான நடிப்பை மிக அழகாக நடித்திருந்தார் நடிகர் ஆனந்த் பாபு அவர்கள். சின்னத்திரையில் வேறு எந்த கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று பொருத்திருந்து பார்ப்போம்.
அப்பாவின் ஆசை மகன் எப்பிடியாவது சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது . அந்த ஆசைகளை எல்லாம் சின்னத்திரையில் நிறைவேற்றி அப்பாவின் பெருமையை காப்பாற்ற பாடுபடுகிறார் ஆனந்த் பாபு. வெற்றி பெற வாழ்த்துவோம்.