Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நாகேஷ் வாரிசு உணர்ச்சிகள் பொங்க பேச ஆரம்பித்து உள்ளார்
சென்னை: தமிழ் திரையுலகில் நகைச்சுவை ஜாம்பவான்களில் ஒருவரான நாகேஷ் அவர்களின் மகன் தான் ஆனந்த் பாபு . இவர் தன் தந்தையை போல நகைச்சுவை நடிகராக இல்லாமல் ஹீரோவாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.
1980களில் ஹீரோக்களில் நடனத்தில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கியவர் ஆனந்த் பாபு . தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என வேறு மொழிகளிலும் நடித்திருக்கிறார். அவர் நடித்த பல படங்களில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
புது வசந்தம் சேரன்பாண்டியன், சிகரம் , வானமே எல்லை போன்ற பல வெற்றிப்படங்களில் நடுத்திருக்கிறார் நடிகர் ஆனந்த் பாபு.
பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் தன்னால் நீண்டகாலம் முன்னணி நடிகனாக நிலைத்து நிற்க முடியவில்லை. சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த நடிகர் ஆனந்த் பாபு அவர்கள். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் தன் பயணத்தை தொடங்கினார்.
முன்னணி தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் நடித்திருந்தார் நடிகர் ஆனந்த் பாபு. ஆனால் அவையாவும் மக்கள் மனதில் பெரிதாக இடம் பிடிக்கவில்லை. இப்பொழுது விஜய் டிவியில் அவர் நடிக்கும் மௌனராகம் தொடரில் காதம்பரியின் தந்தையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
'அதுக்காக ஒழுக்கம் கெட்ட பெண்ணானாலும் பரவாயில்ல'.. கவர்ச்சி போட்டோவுடன் சிவா பட நடிகை சர்ச்சை பதிவு!
ஒரு தந்தையாக தன் மகள் செய்த குற்றத்தை தானே செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்கிறார் . ஒரு தந்தையாக தன்னுடைய உணர்வுபூர்வமான நடிப்பை மிக அழகாக நடித்திருந்தார் நடிகர் ஆனந்த் பாபு அவர்கள். சின்னத்திரையில் வேறு எந்த கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று பொருத்திருந்து பார்ப்போம்.
அப்பாவின் ஆசை மகன் எப்பிடியாவது சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது . அந்த ஆசைகளை எல்லாம் சின்னத்திரையில் நிறைவேற்றி அப்பாவின் பெருமையை காப்பாற்ற பாடுபடுகிறார் ஆனந்த் பாபு. வெற்றி பெற வாழ்த்துவோம்.