Just In
- 10 hrs ago
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- 10 hrs ago
அருண் விஜய்யின் அடுத்த மிஷனில் இணைந்த புதுமுக நடிகை.. அது என்ன மிஷன் தெரியுமா?
- 11 hrs ago
பிரபல ரஜினி பட நடிகர் நவாஸுதீன் சித்திக்கின் தங்கை 26 வயதில் திடீர் மரணம்.. சோகத்திதில் பாலிவுட்!
- 12 hrs ago
ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. கொடுக்கப்போறது யார் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle
இந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...
- Sports
இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா? ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி!
- News
உள்ளாட்சி தேர்தல்.. திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவது ஏன்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Technology
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாகேஷ் வாரிசு உணர்ச்சிகள் பொங்க பேச ஆரம்பித்து உள்ளார்
சென்னை: தமிழ் திரையுலகில் நகைச்சுவை ஜாம்பவான்களில் ஒருவரான நாகேஷ் அவர்களின் மகன் தான் ஆனந்த் பாபு . இவர் தன் தந்தையை போல நகைச்சுவை நடிகராக இல்லாமல் ஹீரோவாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.
1980களில் ஹீரோக்களில் நடனத்தில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கியவர் ஆனந்த் பாபு . தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என வேறு மொழிகளிலும் நடித்திருக்கிறார். அவர் நடித்த பல படங்களில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

புது வசந்தம் சேரன்பாண்டியன், சிகரம் , வானமே எல்லை போன்ற பல வெற்றிப்படங்களில் நடுத்திருக்கிறார் நடிகர் ஆனந்த் பாபு.
பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் தன்னால் நீண்டகாலம் முன்னணி நடிகனாக நிலைத்து நிற்க முடியவில்லை. சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த நடிகர் ஆனந்த் பாபு அவர்கள். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் தன் பயணத்தை தொடங்கினார்.

முன்னணி தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் நடித்திருந்தார் நடிகர் ஆனந்த் பாபு. ஆனால் அவையாவும் மக்கள் மனதில் பெரிதாக இடம் பிடிக்கவில்லை. இப்பொழுது விஜய் டிவியில் அவர் நடிக்கும் மௌனராகம் தொடரில் காதம்பரியின் தந்தையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு தந்தையாக தன்னுடைய நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ஆனந்த் பாபு. தன் மகளுடைய சந்தோஷத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு தந்தையாக மிக கச்சிதமாக நடித்திருக்கிறார்.
'அதுக்காக ஒழுக்கம் கெட்ட பெண்ணானாலும் பரவாயில்ல'.. கவர்ச்சி போட்டோவுடன் சிவா பட நடிகை சர்ச்சை பதிவு!
ஒரு தந்தையாக தன் மகள் செய்த குற்றத்தை தானே செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்கிறார் . ஒரு தந்தையாக தன்னுடைய உணர்வுபூர்வமான நடிப்பை மிக அழகாக நடித்திருந்தார் நடிகர் ஆனந்த் பாபு அவர்கள். சின்னத்திரையில் வேறு எந்த கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று பொருத்திருந்து பார்ப்போம்.
அப்பாவின் ஆசை மகன் எப்பிடியாவது சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது . அந்த ஆசைகளை எல்லாம் சின்னத்திரையில் நிறைவேற்றி அப்பாவின் பெருமையை காப்பாற்ற பாடுபடுகிறார் ஆனந்த் பாபு. வெற்றி பெற வாழ்த்துவோம்.