twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீக்கிரமா வாங்கம்மா.. நீங்க வந்துருவீங்கம்மா.. நளினி அழுகை!

    By Sudha
    |

    சென்னை: ஜெயலலிதாவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அத்தனை பேரும் அழுது கொண்டிருக்கிறோம். அம்மா, சீக்கிரமாக வாங்கம்மா, நீங்க வந்துருவீங்கம்மா என்று நடிகை நளினி அழுதபடி கூறினார்.

    நடிகை நளினி, சென்னையில் இன்று நடந்த திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

    Nalini cries for Jayalalitha

    உண்ணாவிரதத்திற்கு இடையே அவர் செய்தியாளரிடம் பேசுகையில், தமிழக மக்கள் அத்தனை பேரும் அனாதைகளாகி நிற்கிறோம். அத்தனை வீடுகளிலும் தாய்மார்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.

    அனாதைகளாகி விட்டதைப் போல நாங்கள் உணர்கிறோம். அத்தனை பேரும் அம்மாவுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அம்மா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.

    அம்மா, நீங்க தனியா இல்லைம்மா. நாங்க இருக்கிறோம், எல்லோரும் இருக்கிறோம். உங்களுக்காக வேண்டிக் கொண்டே இருக்கிறோம். சீக்கிரமா வாங்கம்மா, நீங்க வந்துருவீங்கம்மா.. வாங்கம்மா என்று அழுதபடி கூறினார்.

    English summary
    Actress Nalini, who attended the cinema industry's fast cried and requested Jayalalitha to come fast from the jail.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X