Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் ரூம்மேட்டும், அம்மாவும் சேர்ந்து தாக்கினார்கள்: காயத்துடன் போலீசிடம் சென்ற நடிகை
மும்பை: தன்னை தாக்கிய ரூம் மேட் மற்றும் அவரின் அம்மா மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை நளினி நெகி.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நளினி நெகி(29). அவர் தன்னுடன் தங்கியுள்ள ப்ரீத்தி என்பவர் மீதும், அவரின் தாய் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நளினியும், ப்ரீத்தியும் மும்பையில் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து நளினி கூறியதாவது,
வயிறை பார்த்து கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்: நெத்தியடி கொடுத்த நடிகை
பிரச்சனை
புதன்கிழமை காலை தான் அந்த சம்பவம் நடந்தது. வீட்டை காலி செய்யுமாறு நான் ப்ரீத்தியிடம் கூறினேன். நானும், ப்ரீத்தியும் பேசுவதே இல்லை. அன்று என் நண்பர் வந்திருந்தார். ப்ரீத்தியின் அம்மாவும் வந்திருந்தார். ப்ரீத்தியின் அம்மா திடீர் என்று என்னை திட்டத் துவங்கிவிட்டார். என் கேரக்டர் பற்றி தரக்குறைவாக பேசினார்.
நளினி
மெதுவாக பேசுங்கள் என்று நான் சொல்லச் சொல்ல மேலும் கத்தினார். பின்னர் அவர் என் ரூம்மேட்டான ப்ரீத்தியை வரவழைத்தார். அதன் பிறகே தாயும், மகளும் என் மீது உள்ள பொறாமையால் ஏதோ செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது புரிய வந்தது. நான் எப்படி வீட்டை காலி செய்யச் சொல்லலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.
தாக்குதல்
ப்ரீத்தியின் அம்மா குவளையை எடுத்து என் மீது வீசினார், அதன் பிறகு நான் மயங்கிவிட்டேன். பின்னர் தாயும், மகளும் சேர்ந்து என்னை அடித்ததுடன், முகத்தில் கீறினர். இதை பார்த்து அங்கிருந்த என் நண்பர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தான் நான் ப்ரீத்தி மற்றும் அவரின் அம்மா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
காயம்
அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பேன். நஷ்ட ஈடு கேட்பது குறித்து நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு காயம் ஏற்பட்டதால் ஷூட்டிங்கிற்கு செல்ல முடியவில்லை என்றார் நளினி. முன்னதாக நளினி பேட்டி ஒன்றில் கூறியதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு ப்ரீத்தியும், நானும் ஒரே வீட்டில் வசித்தோம். பின்னர் நான் ஓஷிவாராவில் ஒரு வீடு எடுத்து தனியாக தங்கினேன். சில வாரங்களுக்கு என்னுடன் தங்க அனுமதி கேட்டார் ப்ரீத்தி, சில வாரங்கள் தானே என்று நினைத்து அனுமதி அளித்தேன் என்றார்.