Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இளையராஜாவைச் சந்தித்தார் நல்லக்கண்ணு!
சென்னை: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர் நல்லக்கண்ணு நேற்று இசைஞானி இளையராஜாவை அவரது பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்துப் பேசினார்.
இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப நாட்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு பின்னிப் பிணைந்தவை. தன் அண்ணனும் குருவுமான பாவலர் வரதராசன் மற்றும் சகோதரர்களோடு, கம்யூனிஸ இயக்க மேடைகளில் பிரச்சாரப் பாடல்களாக ஒலித்தவை ராஜாவின் குரலும் இசையும்.
கம்யூனிச இயக்கங்கள் எப்போதும் எந்த மேடையிலும் இதை நினைவு கூறத் தயங்கியதில்லை. இளையராஜாவும் அப்படியே. ராஜாவின் சாதனைகளை பெருமையுடன் அவ்வப்போது கொண்டாடவும் தவறுவதில்லை கம்யூனிஸ்ட் அமைப்புகள்.
அந்த வகையில் இளையராஜா மீது பெரும் அன்பும் மதிப்பும் கொண்ட மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு நேற்று இளையராஜாவை அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில் வைத்து சந்தித்தார்.
அவரை வரவேற்று அழைத்துச் சென்ற இளையராஜா, நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இளையராஜாவின் குரல் ஒலித்த முதல் மேடை, பாவலர் சகோதரர்கள் கச்சேரி செய்த கம்யூனிஸ மேடைகள், ஊர்கள் பற்றியெல்லாம் நல்லக்கண்ணு நினைவு கூற, அவற்றை மகிழ்வுடன் ஆமோதித்தார் இளையராஜா.
பின்னர் ஈரோட்டில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு இளையராஜாவுக்கு நல்லக்கண்ணு அழைப்புவிட, ராஜாவும் வர ஒப்புக் கொண்டார். பின்னர் விடைபெற்றுச் சென்றார் நல்லக்கண்ணு.