Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மிரட்டல்: நமிதா-பரத்கபூர் பேட்டி
காதலர் பரத் கபூருக்கு சிலர் மிரட்டல் விடுப்பதாக சென்னை மாநகர காவல்துறைஆணையர் அலுவலகத்திற்கு, காதலருடன் வந்து நடிகை நமீதா புகார் கொடுத்தார்.
நமீதாவின் நிழல்போல அவருனேயேஎப்போதும் இருப்பவர் பரத்கபூர். இவரை நமீதாகாதலிப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. ஆனால் கபூர் தனது நண்பர் மட்டுமேஎன்று நமீதா கூறுகிறார்.இந் நிலையில் இன்று மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நமீதா, பரத்கபூருடன் வந்தார். மேக்கப் இல்லாமல் வந்திருந்ததால் அவரை உடனடியாகயாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
ஆனாலும் அவரை சரியாக அடையாளம் கண்டு கொண்ட ஒரு போலீஸ்காரர்,என்னம்மா விஷயம், இங்கே வந்திருக்கீங்க என்று குசலம் விசாரித்தார். அதற்கு அவர்கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டை பார்க்க வேண்டும் என்று கூறவே இதையடுத்துஜாங்கிட்டிடம் நமீதாவையும், பரத் கபூரையும் அந்த போலீஸ்காரர் அழைத்துச்சென்றார்.
ஜாங்கிட்டும் இந்திக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று ஒரு விழாவில்ஜாங்கிட்டும் நமிதாவும் கலந்து கொண்டனர். அப்போது ஜாங்கிட்டிடம் பரத்துக்குவரும் மிரட்டல் குறித்து கூறியுள்ளார். முறைப்படி புகார் கொடுக்குமாறு கூறிவிட்டுச்சென்றார் ஜாங்கிட்.
இதையடுத்து இன்று ஜாங்கிட்டை சந்திக்க வந்தார். மிக பதட்டமாக காணப்பட்டநமீதா, ஜாங்கிட்டிடம், இவர் எனது காதலர் பரத் கபூர். இவருக்கு நுங்கம்பாக்கத்தில்டெலிஷாப்பிங் நிறுவனம் உள்ளது. மேலும், சொத்துப் பிரச்சினையும் உள்ளது.இதுதொடர்பாக அடிக்கடி சிலர் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வாய் மொழியாகக் கூறினார்.
இதைக் கேட்ட ஜாங்கிட், இப்படி புகார் கொடுக்கக்கூடாது. எழுத்து மூலமானபுகாரைத்தான் பெற முடியும். எனவே புகாராக எழுதிக் கொடுங்கள் என்றார். இதைத்தொடர்ந்து தான் சொன்னதை அப்படியே புகார் மனுவாக எழுதி ஜாங்கிட்டிடம் நமீதாகொடுத்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்தார்.அதற்குள் நமீதா வந்த செய்தி பரவி நிருபர்களும் குவிந்து விட்டனர். பெரும்கூடடமாக அவர்கள் நிற்பதைப் பார்த்த நமீதா பீதியடைந்து திரும்ப உள்ளே போனார்.(பரத்தையும் தன்னையும் சேர்த்து படம் எடுத்துவிடுவார்கள் என்ற பயம்)
அங்கிருந்த போலீஸாரிடம், இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள். அப்போதுதான் என்னால் போகமுடியும் என்று கோரினார் நமிதா, ஆனால் செய்தியாளர்களைஅப்புறப்படுத்த முடியாது என்று போலீசார் கூறி விட்டனர்.
இதையடுத்த தனது செல்போன் மூலம் இன்னொரு காரை வரவழைத்தார் நமீதா.பின்னர் அவரும் பரத்கபூரும், தனித்தனியே வெளியே வந்து ஆளுக்கொரு காரில் ஏறிஅங்கிருந்து சென்று விட்டனர்.
நமீதாவின் புகார் குறித்து கூடுதல் ஆணையர் ஜாங்கிட் கூறுகையில், சென்னையில்நேற்று சுமதி விஷால் ஜெயின் புத்தக வங்கியின் 16வது ஆண்டு புத்தக வினியோகநிகழ்ச்சி நடந்தது. அதில் நான் கலந்துகொண்டேன். அந்த நிகழ்ச்சிக்கு நமீதாவும்வந்திருந்தார்.
அப்போது என்னிடம், தனது நண்பருக்கு மிரட்டல் வருவதாகவும், நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனறும் கூறினார். அலுவலகம் வந்து புகார் தருமாறு கூறினேன்.அதன்படி இப்போது வந்து புகார் கொடுதது சென்றுள்ளார். அதுகுறித்துவிசாரிக்கப்படும் என்றார் ஜாங்கிட்.நமிதா பேட்டி:
பின்னர் நமிதா கூறுகையில்,
எழும்பூரில் என் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நிலம் வாங்கினேன். அங்கு கேசட்ஸ்குரு என்ற நிறுவனத்தை தொடங்கினேன். இது எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும்நிறுவனம். இந்த நிலத்தின் அருகே இருப்பவர்கள் எங்களை இடத்தை காலி செய்யச்சொல்லி மிரட்டினார்கள். இதனால் தான் புகார் கொடுக்க வந்தேன். நடிகையாகஇருந்தாலும் நானும் பெண் தான், எனக்கும் பிரச்சனைகள் உள்ளன என்ற நமிதாபரத்கபூர் குறித்து ஏதும் பேசவில்லை.
நமிதாவும் பரத்கபூரும் நுங்கம்பாக்கத்தில் ஒரு பிளாட்டில் ஒன்றாக வசிக்கின்றனர்.இந்த கொலை மிரட்டலையடுத்து அவர்கள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
பரத்கபூர் பேட்டி:
பரத்கபூர் கூறுகையில்,
எனக்கும் நமிதாவுக்கும் ரொம்ப கால பழக்கம். அவர் 3 வருடத்துக்கு மேல்சினிமாவில் நீடிக்க முடியாது என்பதால், ஏதாவது தொழில் தொடங்க யோசித்து தான்மைலாப்பூரில் இடம் வாங்கி கேசட் குரு டாட் காம் என்ற எலெக்ட்ரானிக்ஸ் கடையைதிறக்கும் வேலையை ஆரம்பித்தோம்.
கட்டட வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில் தான் யாரோ ஒருவர் என்னைதொலைபேசியில் மிரட்டினார். அந்த இடத்தில் கட்டட வேலை நடத்தவேண்டுமானாலா எங்களுக்கு பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் உன்னைகொல்வோம் என எச்சரித்தனர். எனக்கு மட்டுமின்றி எனது தொழில் பார்ட்னர்களானகமல் கண்ணன், குமார் ஆகியோருக்கும் மிரட்டல் வந்தது.
முதலில் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். ஆனால், டார்ச்சர்அதிகமானதால் தான் போலீசில் புகார் தந்தோம்.
வசதியானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் வேலையாக இருக்கும் எனநினைக்கிறேன். போலீசிடம் புகார் தந்த பின்னர் எனக்கு மிரட்டல் வருவதுநின்றுள்ளது என்றார்.