Don't Miss!
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தனுஸ்ரீ விவகாரம்: செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்த நானா படேகர்
மும்பை: தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்து பேச ஏற்பாடு செய்த செய்தியாளர்களின் சந்திப்பை ரத்து செய்துள்ளார் நடிகர் நானா படேகர்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார். இது குறித்து விளக்கம் அளிக்க நானா படேகர் இன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அவரின் மகன் நேற்று மாலை பத்திரிகையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பினார்.
தனுஸ்ரீ
தன் வீட்டின் முன்பு கூடியிருந்த மீடியாவை சந்தித்த நானா படேகர் கூறியதாவது, எந்த சேனலிடமும் பேசக் கூடாது என்று என் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நான் அவரின் பேச்சை கேட்க விரும்புகிறேன். நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதையே தான் தற்போதும் கூறுகிறேன், உண்மை என்றுமே மாறாது என்றார்.
நடிகைகள்
தனுஸ்ரீ தத்தா பேசியதை பார்த்து மேலும் சில நடிகைகளும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிடத் துவங்கியுள்ளனர். இது தவிர மீடியாவில் உள்ள பெண்களும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை தெரிவித்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக மனதில் போட்டு குமுறியதை வெளிப்படுத்துகிறார்கள்.
|
பாலியல் புகார்
அனைத்திந்திய பக்சோட் என்ற காமெடி அமைப்பின் நிறுவனர் தன்மய் பட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றொரு நிறுவனரான குர்சிம்ரன் கம்பா காலவரையற்ற விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். காமெடியன் உத்சவ் சக்ரபர்த்தி ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தும் ஒன்றும் செய்யாததால் தன்மய் விலக்கப்பட்டுள்ளார். குர்சிம்ரன் கம்பா ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்
தனுஸ்ரீ தத்தா விவகாரத்திற்கு பிறகு பாலிவுட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் பாலியல் புகார்களாக உள்ளது. தினம் தினம் நடிகைகள் பாலியல் புகார் தெரிவிக்கிறார்கள். இயக்குனர் விகாஸ் பெஹல் மீது பாலியல் புகார்கள் குவிந்து கொண்டிருக்கிறது என்பது குறி