Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கெரியரை நாசம் பண்ணிட்டார், சும்மா இருக்க மாட்டேன்: காலா வில்லன் பற்றி குமுறும் நடிகை
மும்பை: நானா படேகர் என் கெரியரை நாசமாக்கிவிட்டார். இனியும் நான் அமைதியாக இருக்க மாட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் நடித்தபோது சீனியர் நடிகரான நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்துள்ளார்.
நானா படேகர் இந்த புகாரை மறுத்துள்ளார். மேலும் தனுஸ்ரீ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
[ சிசிவி, சாமி இருக்கட்டும் பரியேறும் பெருமாளுக்காக மக்கள் செய்த காரியத்தை பாருங்க ]
நானா படேகர்
நானா படேகரால் என் சினிமா வாழ்க்கை நாசமாகிவிட்டது. பட வாய்ப்புகள் இல்லாமல் என் கெரியர் முடிவுக்கு வந்துவிட்டது. அவரால் நான் திரையுலகை விட்டு வெளியேறினேன். இனியும் நான் அமைதியாக இருக்க மாட்டேன். அவரிடம் இருந்து எந்த வக்கீல் நோட்டீஸும் இதுவரை வரவில்லை. நான் அதற்காக காத்திருக்கிறேன் என்று தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.
பணம்
நான் உண்மையை சொல்வதில் இருந்து என்னை யாரும் தடுக்க முடியாது. வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன் என்று மிரட்டி என்னை அடக்கிவிட முடியாது. பணத்திற்காக எதுவும் செய்யும் வழக்கறிஞர்களை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. அவர்கள் பணத்திற்காகவும், புகழுக்காகவும் தவறு செய்தவர்களை ஆதரிக்கிறார்கள் என்கிறார் தனுஸ்ரீ.
நடவடிக்கை
நானா படேகர் பல விஷயங்களை கண்டிப்பாக மறைத்திருப்பார். நானா படேகர் மற்றும் அவரின் வழக்கறிஞரை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நானா போன்ற ஆளுக்கு ஆதரவாக உள்ள வழக்கறிஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார் அசோசியேஷனை கேட்டுக் கொள்கிறேன் என்று தனுஸ்ரீ கூறியுள்ளார்.
|
ஆதாரம்
நானா படேகரால் அந்த படத்தில் நடிக்க மறுத்து கிளம்பிய தனுஸ்ரீ காரை சிலர் தாக்கியுள்ளனர். 2008ம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் நானா படேகர் ஹவுஸ்ஃபுல் 4 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.