Don't Miss!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- News இன்டர்நேஷனல் பிரஷர்.. மோடியை தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்.. சீக்ரெட்டை உடைத்த எக்ஸ்பர்ட்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரில்லர் படத்தில் சிபிராஜ் சத்யராஜ் கூட்டணியில் இணைந்த நந்திதா ஸ்வேதா
சென்னை: சத்யராஜும் சிபிராஜும் இணைந்து நடிக்கும் புதிய திரில்லர் திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நந்திரா ஸ்வேதா ஒரு பத்திரிகையாளராக நடிக்கவிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் எந்தவொரு காதல் கட்சிகள் இருக்காது என்றாலும், அவரது கதாபாத்திரம் திரைப்படத்தில் ஒரு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
க்ஷணம் என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அந்த திரைப்படத்தை தமிழில் சத்யா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தை சைத்தான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், ஆனந்தராஜ், சதிஷ், நடிகைகள் ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்
அந்த திரைப்படத்திற்க பிறகு, தற்போது புதிய த்ரில்லர் படத்திற்காக மீண்டும் அதே இயக்குனருடன் கைகோர்த்துள்ளார் சிபிராஜ். இந்த திரைப்படத்தை ஜி.தனஞ்சயன் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படம் இயக்குனர் ஹேமந்த் ராவ் இயக்கிய கன்னட சூப்பர் ஹிட் த்ரில்லர் திரைபடமான காவலூடாரி. இந்த திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
இந்த திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜ் மற்றும் சிபிராஜ் ஆகியோர் ஒன்றிணைந்து நடிக்கிறார்கள். இதற்கு முன்பு இருவரும் இணைந்து ஜாக்சன் துரை என்ற காமெடி திரில்லர் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகரிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தையும் கொடுத்தது.
அந்த படத்திற்கு பின்பு, இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜும் சிபிராஜும் இப்போது இந்த புதிய திரில்லர் திரைப்படத்தில் நடிக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா ஒரு பத்திரிகையாளராக நடிக்கிறார். அவருக்கு இப்படத்தில் எந்தவொரு காதல் கட்சிகளை இருக்காது என்றாலும், அவரது கதாபாத்திரம் திரைப்படத்தில் ஒரு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நந்திதா ஸ்வேதா கடைசியாக தேவி 2 மற்றும் தமிழ், தெலுங்கு இருமொழி திரைப்படமான செவனில் நடித்தார்.
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!