Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
படங்களை சென்சார் செய்வதில் ரேட்டிங் முறை... நந்திதா தாஸ் ஆலோசனை!
மும்பை: படங்களை தணிக்கை செய்வதில் தரமதிப்பீடு முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று நடிகை நந்திதா தாஸ் ஆலோசனை கூறியுள்ளார்.
தணிக்கை அமைப்பு முறை மாற்றம் குறித்து அவர் கூறுகையில், "ஒரு படத்தைத் தணிக்கை செய்வது என்பது ஆபத்தான வழிமுறை.
ஏனெனில் 5, 6 பேர் சேர்ந்து பல கோடி பேர் என்ன பார்க்கவேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். எனக்குப் பிடிப்பது மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். மற்றவர்களுக்குப் பிடிப்பது எனக்குப் பிடிக்காமல் போகலாம். மக்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.
இப்போது இணையத்தில் எல்லாமே பார்க்கமுடியும். அதனால்தான் தணிக்கை அமைப்பின் விதிமுறைகளை மாற்றுவதற்காக ஷியாம் பெனகல் தலைமையில் குழு ஒன்றை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. படத்தைத் தணிக்கை செய்வதில் தரமதிப்பீடு (ரேட்டிங்) முறையைக் கொண்டுவரவேண்டும். இதனால் எது சரி, எது தவறு என்று 5 தனிப்பட்ட நபர்கள் சேர்ந்து முடிவெடுக்கும் முறை மாற்றப்படும்.
பெண்களைத் தவறான முறையில் காண்பித்த பல படங்கள் தணிக்கை செய்யப்படாமல் வெளிவந்துள்ளன. அதேபோல, நம்மை பல தலைமுறைக்குப் பின்னால் கொண்டுசெல்லும் வன்முறைக் காட்சிகளும் வசனங்களும் கொண்ட படங்களும்கூட சரியாகத் தணிக்கை செய்யப்படவில்லை. எனக்குப் பிடிக்காது என்பதற்காக ஒரு படம் தணிக்கை செய்யப்படவேண்டும் என்று சொல்லவில்லை. எல்லாவிதமான படங்களும் வெளிவரவேண்டும். எது சரி, எது தவறு என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும்," என்றார்.