Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படங்களை சென்சார் செய்வதில் ரேட்டிங் முறை... நந்திதா தாஸ் ஆலோசனை!
மும்பை: படங்களை தணிக்கை செய்வதில் தரமதிப்பீடு முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று நடிகை நந்திதா தாஸ் ஆலோசனை கூறியுள்ளார்.
தணிக்கை அமைப்பு முறை மாற்றம் குறித்து அவர் கூறுகையில், "ஒரு படத்தைத் தணிக்கை செய்வது என்பது ஆபத்தான வழிமுறை.
ஏனெனில் 5, 6 பேர் சேர்ந்து பல கோடி பேர் என்ன பார்க்கவேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். எனக்குப் பிடிப்பது மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். மற்றவர்களுக்குப் பிடிப்பது எனக்குப் பிடிக்காமல் போகலாம். மக்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.
இப்போது இணையத்தில் எல்லாமே பார்க்கமுடியும். அதனால்தான் தணிக்கை அமைப்பின் விதிமுறைகளை மாற்றுவதற்காக ஷியாம் பெனகல் தலைமையில் குழு ஒன்றை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. படத்தைத் தணிக்கை செய்வதில் தரமதிப்பீடு (ரேட்டிங்) முறையைக் கொண்டுவரவேண்டும். இதனால் எது சரி, எது தவறு என்று 5 தனிப்பட்ட நபர்கள் சேர்ந்து முடிவெடுக்கும் முறை மாற்றப்படும்.
பெண்களைத் தவறான முறையில் காண்பித்த பல படங்கள் தணிக்கை செய்யப்படாமல் வெளிவந்துள்ளன. அதேபோல, நம்மை பல தலைமுறைக்குப் பின்னால் கொண்டுசெல்லும் வன்முறைக் காட்சிகளும் வசனங்களும் கொண்ட படங்களும்கூட சரியாகத் தணிக்கை செய்யப்படவில்லை. எனக்குப் பிடிக்காது என்பதற்காக ஒரு படம் தணிக்கை செய்யப்படவேண்டும் என்று சொல்லவில்லை. எல்லாவிதமான படங்களும் வெளிவரவேண்டும். எது சரி, எது தவறு என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும்," என்றார்.