twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மேடையில் கதறி அழுத சாய் பல்லவி... கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன நானி!

    |

    சென்னை : தெலுங்கில் மிக பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் பட விழா ஒன்றில் மேடையில் கதறியழுத சாய்பல்லவி-யை நானி கட்டி அணைத்து ஆறுதல் கூடியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது
    பிரேமம்

    எந்தவித திரை பின்புலமும் இல்லாமல் இப்பொழுது சினிமாவில் மிகச் சிறந்த நடிகையாக கலக்கி கொண்டுள்ளவர் . தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் மிகவும் சரளமாக பேசக்கூடிய சாய்பல்லவி முதல் முதலில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தாம் தூம், கஸ்தூரி மான் உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.

    தியேட்டர்களை தெறிக்கவிட நாளை வருகிறான் பேட்மேன்.. ரஷ்யாவில் மட்டும் ரிலீஸ் இல்லையாம்!தியேட்டர்களை தெறிக்கவிட நாளை வருகிறான் பேட்மேன்.. ரஷ்யாவில் மட்டும் ரிலீஸ் இல்லையாம்!

    நடனத்திலும் மிகச் சிறந்தவராக

    நடனத்திலும் மிகச் சிறந்தவராக

    தெலுங்கில் இவருக்கு ஃபிடா திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது அதை தொடர்ந்து தெலுங்கில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதால் தற்போது தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் சாய்பல்லவி நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் மிகச் சிறந்தவராக இருந்து வருகிறார். இதுவரை துளிகூட கவர்ச்சி காட்டாமல் தனது திறமையின் மூலம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய் பல்லவி.

    ஜாதி தீண்டாமை

    ஜாதி தீண்டாமை

    மிடில் கிளாஸ் அப்பாயி படத்திற்கு பிறகு மீண்டும் நானி உடன் இணைந்து நடித்த திரைப்படம் ஷ்யாம் சிங்கா ராய் ராகுல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தை பற்றியும் ஜாதி தீண்டாமை பற்றியும் மிக அழுத்தமாக பேசியிருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவி தேவதாசியாக பிளாஷ்பேக்கில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டையும் கொடுத்து நடித்து மிரட்டியிருப்பார்.

    காணாமல் போயிருப்பேன்

    காணாமல் போயிருப்பேன்

    இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வரையிலும் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் ஷ்யாம் சிங்கா ராய் பட விழா ஒன்றில் சாய்பல்லவி உருக்கமாக பேசியுள்ளார். இன்று பலர் இண்டஸ்ட்ரியில் டான்ஸராகவும், நடிகையாகவும்,பாடகியாகவும் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். எனக்கு இதுபோன்ற வாய்ப்பை வழங்கியதற்கு நல்ல கதாபாத்திரங்களை எனக்கு கொடுத்த இயக்குனர்களுக்கும் நன்றி.

    மேடையில் கதறி அழுது பேசிய

    மேடையில் கதறி அழுது பேசிய

    எல்லோரும் சொல்கிறார்கள் நான் நன்றாக நடிக்கிறேன், நிறைய ஹார்ட் வொர்க் செய்கிறேன் என்று ஆனால் எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை நான் செய்யும் ஒவ்வொரு செயலையும் என்ஜாய் செய்து செய்கிறேன். இவை அனைத்தும் நீங்கள் கொடுத்த அதரவால் மட்டுமே. நீங்கள் பார்த்த முதல் படத்திலேயே எதற்கு இந்த பொண்ணு என நினைத்திருந்தால் இந்நேரம் நான் காணாமல் போயிருப்பேன். எனவே எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் என்னை நம்பி நல்ல பாத்திரங்களை கொடுக்கும் படைப்பாளிகளுக்கும் நன்றி. என ஷ்யாம் சிங்கா ராய் பட விழாவில் சாய் பல்லவி ரொம்பவே ஏமோஷனல் ஆகி மேடையில் கதறி அழுது பேசியதை பார்த்து நானி கட்டியணைத்து ஆறுதல் சொன்ன வீடியோ இப்பொழுது இணையதளத்தில் வைரலாகிறது.

    English summary
    Nani Give Comfort to Actress Sai Pallavi Who Cried in Stage
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X