Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாஞ்சில் விஜயன் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்.. யூடியூபர் சூரியாதேவி மீது பரபரப்பு புகார்!
சென்னை: தனது வீட்டுக்குள் புகுந்து ரவுடிகள் தாக்கியதாகவும் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் நாஞ்சில் விஜயன் புகார் கூறி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.
இப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். யூடியூப்பிலும் அடிக்கடி தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
வனிதாவுக்கு எதிராக
நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பாலை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையானது. முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் வனிதாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர்.
நாஞ்சில் விஜயன்
அப்போது நாஞ்சில் விஜயனும் கருத்து தெரிவித்தார். இது பரபரப்பானது. நாஞ்சில் விஜயனும் யூடியூபர் சூரியா தேவிவும் வனிதாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். பின்னர் வனிதா, சூரியாதேவி மீது புகார் கொடுத்தார். இது பரபரப்பான நிலையில், தன்னிடம் நாஞ்சில் விஜயன் பேசி, மன்னிப்புக் கேட்டதாக வனிதா விஜயகுமார் கூறினார்.
ரவுடிகள் தாக்குதல்
இதை நாஞ்சில் விஜயன் மறுத்தார். தான் மன்னிப்புக் கேட்கவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பிரச்னை ஓய்ந்திருந்த நிலையில், நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்றிரவு ரவுடிகள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்ய முயற்சி
இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக அதில் கூறியுள்ளார். வீடியோவில், போலீசார் வீட்டுக்குள்ளும் வெளியேவும் நிற்கின்றனர். நாஞ்சில் விஜயன் தனது முகத்தில் உள்ள காயத்தை காண்பிக்கிறார்.
போலீசார் விசாரணை
வீட்டின் உள்ளே பெண் ஒருவரின் கையில் காயம் இருக்கிறது. அவர் கை வலிப்பதாக அழுகிறார். மருத்துவமனைக்கு செல்லலாம் என்கிறார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படும் காட்சி இருக்கிறது. இதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.'நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆச்சே என்று சிலர் கேட்டுள்ளனர்.