Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நாஞ்சில் விஜயன் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்.. யூடியூபர் சூரியாதேவி மீது பரபரப்பு புகார்!
சென்னை: தனது வீட்டுக்குள் புகுந்து ரவுடிகள் தாக்கியதாகவும் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் நாஞ்சில் விஜயன் புகார் கூறி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.
இப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். யூடியூப்பிலும் அடிக்கடி தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
வனிதாவுக்கு எதிராக
நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பாலை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையானது. முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் வனிதாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர்.
நாஞ்சில் விஜயன்
அப்போது நாஞ்சில் விஜயனும் கருத்து தெரிவித்தார். இது பரபரப்பானது. நாஞ்சில் விஜயனும் யூடியூபர் சூரியா தேவிவும் வனிதாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். பின்னர் வனிதா, சூரியாதேவி மீது புகார் கொடுத்தார். இது பரபரப்பான நிலையில், தன்னிடம் நாஞ்சில் விஜயன் பேசி, மன்னிப்புக் கேட்டதாக வனிதா விஜயகுமார் கூறினார்.
ரவுடிகள் தாக்குதல்
இதை நாஞ்சில் விஜயன் மறுத்தார். தான் மன்னிப்புக் கேட்கவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பிரச்னை ஓய்ந்திருந்த நிலையில், நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்றிரவு ரவுடிகள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்ய முயற்சி
இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக அதில் கூறியுள்ளார். வீடியோவில், போலீசார் வீட்டுக்குள்ளும் வெளியேவும் நிற்கின்றனர். நாஞ்சில் விஜயன் தனது முகத்தில் உள்ள காயத்தை காண்பிக்கிறார்.
போலீசார் விசாரணை
வீட்டின் உள்ளே பெண் ஒருவரின் கையில் காயம் இருக்கிறது. அவர் கை வலிப்பதாக அழுகிறார். மருத்துவமனைக்கு செல்லலாம் என்கிறார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படும் காட்சி இருக்கிறது. இதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.'நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆச்சே என்று சிலர் கேட்டுள்ளனர்.