Don't Miss!
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு.. அமீரின் 'நாற்காலி'யில் எம்ஜிஆர் புகழ்பாடும் பாடல்.. முதல்வர் வெளியிட்டார்
சென்னை: அமீரின் நாற்காலி படத்தில் இடம்பெற்றுள்ள எம்.ஜி.ஆர் புகழ் பாடும் பாடலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
சூர்யா நடித்த, மெளனம் பேசியதே படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அமீர்.
Recommended Video
அடுத்து ஜீவா நடித்த ராம், கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன், ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் உட்பட படங்களை இயக்கினார்.
அரசியல் நாற்காலி
பின்னர் சுப்ரமணிய சிவா இயக்கிய, யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்து, சில படங்களில் நடித்த அமீர், கடைசியாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதி
இதில் அரசியல்வாதி வேடத்தில் அமீர் நடிக்கிறார். படத்தை வி.இஸட்.துரை இயக்குகிறார். இவர், அஜித் நடித்த முகவரி, விக்ரம் நடித்த காதல் சடுகுடு, ஷாம் நடித்த 6 மெழுகு வர்த்திகள், சுந்தர்.சி நடித்த இருட்டு உட்பட சில படங்களை இயக்கியவர். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அஜயன் பாலா வசனம் எழுதுகிறார்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
இந்தப் படத்தை, மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். இதில் அமீர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இவர் வில் அம்பு, நையப்புடை, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வணங்காமுடி உட்பட பல படங்களில் நடித்தவர். வித்யா சாகர் இசை அமைக்கும் இந்த அரசியல் படத்தில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற பாடல் இடம்பெறுகிறது.
வள்ளலுக்கு வச்ச பெயர்
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இந்தப் பாடலை, பா. விஜய் எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு, அந்த வள்ளலுக்கு வச்ச பெயர் வாத்தியாரு' என்று இந்தப் பாடல் தொடங்குகிறது.
எடப்பாடி பழனிச்சாமி
அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். எளிய முறையில் நடந்த இந்த விழாவில், அதை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொண்டார்.
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!