Don't Miss!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு.. அமீரின் 'நாற்காலி'யில் எம்ஜிஆர் புகழ்பாடும் பாடல்.. முதல்வர் வெளியிட்டார்
சென்னை: அமீரின் நாற்காலி படத்தில் இடம்பெற்றுள்ள எம்.ஜி.ஆர் புகழ் பாடும் பாடலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
சூர்யா நடித்த, மெளனம் பேசியதே படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அமீர்.
Recommended Video
அடுத்து ஜீவா நடித்த ராம், கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன், ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் உட்பட படங்களை இயக்கினார்.
அரசியல் நாற்காலி
பின்னர் சுப்ரமணிய சிவா இயக்கிய, யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்து, சில படங்களில் நடித்த அமீர், கடைசியாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதி
இதில் அரசியல்வாதி வேடத்தில் அமீர் நடிக்கிறார். படத்தை வி.இஸட்.துரை இயக்குகிறார். இவர், அஜித் நடித்த முகவரி, விக்ரம் நடித்த காதல் சடுகுடு, ஷாம் நடித்த 6 மெழுகு வர்த்திகள், சுந்தர்.சி நடித்த இருட்டு உட்பட சில படங்களை இயக்கியவர். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அஜயன் பாலா வசனம் எழுதுகிறார்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
இந்தப் படத்தை, மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார். இதில் அமீர் ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இவர் வில் அம்பு, நையப்புடை, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வணங்காமுடி உட்பட பல படங்களில் நடித்தவர். வித்யா சாகர் இசை அமைக்கும் இந்த அரசியல் படத்தில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற பாடல் இடம்பெறுகிறது.
வள்ளலுக்கு வச்ச பெயர்
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இந்தப் பாடலை, பா. விஜய் எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு, அந்த வள்ளலுக்கு வச்ச பெயர் வாத்தியாரு' என்று இந்தப் பாடல் தொடங்குகிறது.
எடப்பாடி பழனிச்சாமி
அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். எளிய முறையில் நடந்த இந்த விழாவில், அதை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொண்டார்.