Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நசீருத்தீன் ஷாவுக்கு என்னாச்சு?
மும்பை: பிரபல இந்தி நடிகர் நசீருத்தீன் ஷா சக நடிகரான பர்ஹான் அக்தரின் நடிப்பை குறை கூறியுள்ளார். இதனால் நசீருத்தீன் நன்றாகத் தானே இருந்தார் திடீர் என்று அவருக்கு என்ன ஆகிவிட்டது என்று பலரும் கேட்கின்றனர்.
இந்தி நடிகர் நசீருத்தீன் ஷா நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர். அவர் கடந்த ஆண்டு வெளியான பாக் மில்கா பாக் படத்தில் பர்ஹான் அக்தரின் நடிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
பாக் மில்கா பாக் ஒரு பொய்யான படம். பர்ஹான் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உடம்பை டெவலப் பண்ணி, முடி வளர்ப்பது நடிப்பில் கடின உழைப்பு இல்லை. அவர் மில்கா போன்று தோன்றவாவது முயற்சி செய்திருக்க வேண்டும். மில்கா தான் இப்படி தான் இருந்தோம் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் 1960களில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூடவா இல்லை? என்றார்.
இதற்கு நசீருத்தின் ஷாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
படத்தில் பர்ஹானுக்கு சகோதரியான நடித்த திவ்யா தத்தா கூறுகையில், நசீர் ஜியை மதிக்கிறேன். ஆனால் அவரின் கருத்தை ஏற்க முடியாது. தியேட்டர்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது. படத்தில் பர்ஹான் மில்கா போன்று தான் இருந்தார். நசீர் இவ்வாறு பேசியிருப்பது அவரது தரத்தை குறைத்துள்ளது. அவர் பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்கிறார் என்றார்.