Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மலையாள நடிகர்கள் சீன் போடுவது இல்லை, அவர்களை இயக்குவது ஈஸி: நாசர்
சென்னை: மலையாள படத்தை இயக்க விரும்புவதாகவும் அங்குள்ள நட்சத்திரங்கள் சீன் போட மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஜுபித் நம்ரதத் இயக்கும் அபாசம் என்னும் மலையாள படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நாசர். தமிழை போன்றே மலையாள திரையுலகிலும் அவர் பிரபலமான நபர்.
சுராஜ், அலென்சியர், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து நாசர் கூறியதாவது,
போலீஸ்
நான் கேரளா-தமிழக எல்லையில் பணிபுரியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். அதனால் படத்தில் நான் பேசும் மலையாளம் சவுகரியமாக இருக்கிறது.
பேருந்து
படம் முழுக்க ஓடும் பேருந்தில் நடக்கும். படக்குழு மிகவும் இளமையான குழுவாக உள்ளது. அவர்கள் படத்தை எடுக்கும் விதம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
டேட்ஸ்
நான் பல மலையாள படங்களில் நடித்திருக்க வேண்டியது. ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போய்விட்டது. மலையாள படம் இயக்கும் ஆசை உள்ளது.
இயக்கம்
மலையாள படத்தை உடனே இயக்க மாட்டேன். ஆனால் இயக்குவேன். கேரளாவின் உணவு, கலாச்சாரம், இலக்கியம், படங்கள் என்று அனைத்தும் எனக்கு பிடிக்கும்.
ஸ்டார்கள்
மலையாள திரையுலகில் அனைவரும் நல்ல நடிகர்கள். அவர்கள் சீன் போடாமல் ப்ரொபஷனலாக நடந்து கொள்கிறார்கள். ஃபஹத் பாசிலாகட்டும், துல்கராகட்டும் ஸ்டார்களாக அல்ல நடிகர்களாக மட்டுமே நடக்கிறார்கள். அதனால் தமிழ் அல்லது தெலுங்கு போன்று இல்லாமல் மலையாள நடிகர்களை வைத்து படம் எடுப்பது வசதி என்று தெரிவித்துள்ளார் நாசர்.