Don't Miss!
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- News ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அனுஷ்கா நான் தத்தெடுத்த மகள்! - நாசர்
அனுஷ்கா நான் தத்தெடுத்த மகள் என்று நடிகர் நாசர் கூறினார்.
ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘இஞ்சி இடுப்பழகி' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இன்று கலந்து கொண்ட நாசர் கூறுகையில், "நான் இந்த விழாவுக்கு ஒரு நடிகராகவோ, நடிகர் சங்க தலைவராகவோ வரவில்லை. ஒரு அப்பாவாக வந்திருக்கிறேன்.
ஆம், நான் அனுஷ்காவை எனது மகளாக தத்தெடுத்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது.
இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, அனுஷ்கா என்னிடம் வந்து இந்த படத்தின் கதையை சொன்னார். குண்டான வேடத்தில் நடிக்க சில தொழில்நுட்பங்களைhd பயன்படுத்தலாம் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவரோ, தானே சிரத்தை உடல் எடையைக் கூட்டி நடிப்பதாகக் கூறினார். அவர் தொழில் மீது வைத்துள்ள மரியாதை அது.
அதுபோல், ஆர்யா எப்போதும் பெண்களுடன் மட்டுமே பேசுவார் என்று பலரும் கூறுகின்றனர். அப்படியெல்லாம் கிடையாது. அவர் எல்லோருடனும் கலகலப்பாக பழகக் கூடியவர். அவருடன் நான் 3-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவர் இருந்தால் அந்த படப்பிடிப்பு தளமே மிகவும் கலகலப்பாக இருக்கும்," என்றார்.