Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தேசிய விருது பெற்ற '' பாரம்''.. டிரெய்லர் ரீலிஸ்!
சென்னை : தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த தேசிய விருது விழாவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பாரம். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய திரைப்படம் தான் பாரம். இவர் ஒரு இயக்குனர், படத்தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் இவர் இதற்கு முன்பு எடுத்த திரைப்படம் காங்கோ பாய். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் அடுத்த இயக்கிய திரைப்படம் தான் பாரம். இது சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது வென்றது. ஒரே தமிழ் திரைப்படம் அந்த விழாவில் தேசிய விருதை வென்றது. மற்றும் இப்படம் கோவாவில் நடந்த இந்திய இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் அரங்கேறியது.
இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து மற்றும் படத்தொகுப்பும் செய்துள்ளார் பிரியா கிருஷ்ணசாமி. ஒரு படத்தில் இத்தகைய உழைப்பை முழுமையாக கொடுத்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்று பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இப்படத்ததை இயக்குனர் வெற்றி மாறன் வழங்குகிறார் இதற்கு முன்பு விசாரணை மற்றும் காக்கா முட்டை போன்ற படங்களை வெற்றிமாறன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வெற்றி இது போன்ற ஒரு படத்தை வெளியிட ஒரு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறார். மேலும் இது போன்ற பல படங்கள் திரைக்கு வர வேண்டும் என்பது அவரின் ஆசையும் கூட.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி டிரெண்ட் ஆனது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிரெய்லரை பார்க்கையில் பல பேருக்கு இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. சமூக வலை தளங்களில் இப்படம் ஒரு பேசும் பொருளாகியுள்ளது. மொத்தத்தில் பாரம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரம்.