Don't Miss!
- News "யாரும் ஒழுங்கா வேலை பார்க்கல.." அதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டாரா எடப்பாடி? வெளியான பரபர தகவல்
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேசிய விருது பெற்ற '' பாரம்''.. டிரெய்லர் ரீலிஸ்!
சென்னை : தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த தேசிய விருது விழாவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பாரம். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய திரைப்படம் தான் பாரம். இவர் ஒரு இயக்குனர், படத்தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் இவர் இதற்கு முன்பு எடுத்த திரைப்படம் காங்கோ பாய். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் அடுத்த இயக்கிய திரைப்படம் தான் பாரம். இது சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது வென்றது. ஒரே தமிழ் திரைப்படம் அந்த விழாவில் தேசிய விருதை வென்றது. மற்றும் இப்படம் கோவாவில் நடந்த இந்திய இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் அரங்கேறியது.
இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து மற்றும் படத்தொகுப்பும் செய்துள்ளார் பிரியா கிருஷ்ணசாமி. ஒரு படத்தில் இத்தகைய உழைப்பை முழுமையாக கொடுத்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்று பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இப்படத்ததை இயக்குனர் வெற்றி மாறன் வழங்குகிறார் இதற்கு முன்பு விசாரணை மற்றும் காக்கா முட்டை போன்ற படங்களை வெற்றிமாறன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வெற்றி இது போன்ற ஒரு படத்தை வெளியிட ஒரு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறார். மேலும் இது போன்ற பல படங்கள் திரைக்கு வர வேண்டும் என்பது அவரின் ஆசையும் கூட.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி டிரெண்ட் ஆனது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிரெய்லரை பார்க்கையில் பல பேருக்கு இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. சமூக வலை தளங்களில் இப்படம் ஒரு பேசும் பொருளாகியுள்ளது. மொத்தத்தில் பாரம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரம்.