Don't Miss!
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
National Awards 2022: ஜோதிகாவை தேசிய விருது வாங்க வைத்த சூர்யா… செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ச்சி
டெல்லி: 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
சூரரைப் போற்று படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை உட்பட மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தவிழாவில் சூரரைப் போற்று படத்துக்காக ஜோதிகாவை விருது வாங்க வைத்து அழகு பார்த்தார் சூர்யா.
யார்
நீங்கள்?..இன்னும்
வெளியே
வராத
படத்திற்கு
விமர்சனமா..கலாய்த்து
சுஹாசினி
ட்வீட்!

68வது தேசிய திரைப்பட விருதுகள் விழா
68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில்.உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று தேசிய விருதுகளை வழங்கினார். இந்த வருடம் தமிழ்த் திரைப்படங்களுக்கு அதிகமான விருதுகள் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்துக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன. சூர்யா, ஜோதிகா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் குமார், நடிகை அபர்ணா ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

ஜோதிகாவுக்கு தேசிய விருது
சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் 2020ல் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது. கொரோனா காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரிய பட்ஜெட்டில் உருவான சூரரைப் போற்று படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் அவரே சொந்தமான தயாரித்தார். இந்நிலையில், முதன்முறையாக சிறந்த நடிகருக்கான விருதை சூரரைப் போற்று படத்துக்காக சூர்யா பெற்றுக் கொண்டார். அதேமேடையில் ஜோதிகாவுக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.

செல்போனில் வீடியோ எடுத்த சூர்யா
சூரரைப் போற்று படம் மொத்தம் 6 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. அதில், சிறந்த படம் என்ற கேட்டகரியிலும் சூரரைப் போற்று தான் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதனால், சூரரைப் போற்று படத்தின் தயாரிப்பாளராக ஜோதிகாவும் தேசிய விருது பெற்றுகொண்டார். சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெற்றுக்கொண்டதால், தயாரிப்பாளருக்கான விருதை ஜோதிகாவை வாங்க வைத்து அழகு பார்த்தார் சூர்யா. அதுமட்டும் இல்லாமல் ஜோதிகா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருது பெற்றதை செல்போனிலும் வீடியோ எடுத்து மகிழ்ந்தார்.

சூர்யா - ஜோதிகாவுக்கு குவியும் வாழ்த்து
சூர்யா - ஜோதிகா இருவரும் ஒரே காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகினர். ஒன்றாக படங்களில் நடிக்கும் போது காதலிக்கத் தொடங்கிய சூர்யாவும் ஜோதிகாவும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஜோதிகாவின் வருகைக்குப் பின்னர் கேரியரில் மாஸ் காட்டிய சூர்யா இப்போது தேசிய விருதும் பெற்றுவிட்டார். அதேபோல் ஜோதிகாவும் தயாரிப்பாளராக தேசிய விருது வாங்கியுள்ளார். இதனையடுத்து சூர்யா, ஜோதிகா இருவருக்கும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.