Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மீரா சோப்ரா புகார்.. தலையிட்ட மகளிர் ஆணையம்.. பூதாகரமாகும் பிரச்சனை.. மெளனம் காக்கும் ஹீரோ!
ஹைதராபாத்: பிரபல டோலிவுட் நடிகரின் ரசிகர்கள் நடிகை மீரா சோப்ராவுக்கு விடுத்த கொலை மிரட்டல் விவாகரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற #AskMeera கேள்வி பதில் நேரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் யார் என்றே தெரியாது என எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் நடித்த மீரா சோப்ரா கூறியது, ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியது.
சமூக வலைதளங்களில் வரம்பு மீறி ஆபாச வார்த்தைகளை பேசி வரும் நெட்டிசன்கள், மீரா சோப்ராவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
பெண்களை எப்படி மதிக்கணும்னு அந்த ஹீரோவுக்கு நல்லாவே தெரியும்..நடிகை பிரச்னையில் இன்னொரு ஹீரோயின்!
கொலை மற்றும் பலாத்கார மிரட்டல்
ஜூனியர் என்.டி.ஆரை தெரியாது என்றும், தனக்கு டோலிவுட்டில் மகேஷ் பாபுவைத் தான் பிடிக்கும் என்றும் நடிகை மீரா சோப்ரா கூறியதை கேட்டு ஆத்திரமடைந்த சில ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், நீ ஒரு ஆபாச நடிகை என்றும், உன்னை கூட்டு பலாத்காரம் செய்து கொல்வோம் என்றும் மிரட்டல் விடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
வழக்குப் பதிவு
இதனால் ஆத்திரமடைந்த மீரா சோப்ரா, இந்த விவகாரத்தை சாதாரணமாக தான் எதிர்கொள்ள போவதில்லை என்றும் ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என சைபர் கிரைம் மற்றும் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். மேலும், ஜூனியர் என்.டி.ஆருக்கு நேரடியாகவே டிவீட் போட்டு இந்த விவகாரம் குறித்து கேள்வியும் எழுப்பியுள்ளார்.
வாய் திறக்காத தாரக்
இப்படி ஒரு பிரச்சனை பூதாகரமாக எழுந்துள்ள நிலையில், நேரடியாக தன்னிடம் ஒரு நடிகை உங்கள் ரசிகர்கள் செய்தது சரியா என கேள்வி எழுப்பி இருந்தும், இதுவரை எந்த பதிலையும் ஆர்.ஆர்.ஆர் நடிகர் தாரக் கூறாமல் மெளனம் காத்து வருவது மேலும் சிக்கலையும் சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது.
Recommended Video
|
தலையிட்ட மகளிர் ஆணையம்
மீரா சோப்ராவுக்கு இந்த விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, ஹைதராபாத் நகர காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் ஒன்றையும் பதிவு செய்திருக்கிறது. சம்பந்தபட்ட அந்த ஐடிகளுக்கு சொந்தக்காரர்களை தேடி பிடித்து கைது செய்யும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், உங்களுக்கு மகளிர் ஆணையம் துணை நிற்கும் என்றும் ரேகா சர்மா டிவீட் போட்டுள்ளார்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?