Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கண்ணெதிரே தோன்றினாள் ரவிச்சந்திரன் இயக்கும் 'நட்பதிகாரம் -79'
கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை, உற்சாகம் போன்ற படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படம் இயக்குகிறார்.
படத்துக்குப் பெயர் நட்பதிகாரம் 79. பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி ரவிகுமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத் நடிக்கிறார். இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயனாக வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார்.
ரேஷ்மி - தேஜஸ்வினி
'இனிது இனிது' படத்தில் நடித்த ரேஷ்மி கதாநாயகியாகவும், இன்னொரு நாயகியாக தேஜஸ்வி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் எம்எஸ் பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கபோவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.
கண்ணெதிரே தோன்றினாள்
ஆர்பி குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் நிலம்பூர் இசையமைக்கிறார். சாபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். சென்ற ஆண்டு தேசிய விருது பெற்றவர் சாபு ஜோசப்.
படம் பற்றி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், "கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் நட்பையும், காதலையும் சொன்ன விதத்தில் அப்படம் பெரிய வெற்றியை பெற்றது.
நட்பதிகாரம்
நட்பதிகாரம் படத்தில் நட்பையும், காதலையும் உள்ளடக்கி இரு குடும்பங்களுக்குகிடையே உள்ள உறவை இதில் பதிவு செய்துள்ளோம்.
மஜ்னு படத்தில் நான் ஹாரீஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்திய போது அவருக்கு கிடைத்த வெற்றி எனக்கு மனத் திருப்தியைதே தந்தது. அது போலவே தீபக் நிலம்பூர் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும்.
தேவா
கண்ணெதிரே தோன்றினாள் படத்திற்கு எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. அதில் இசையமைத்த தேவா நட்பதிகாரம் - 79 படத்தில் ஒரு கானா பாடியுள்ளார். அது இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் ஆகும் என நம்புகிறேன்.
சென்னை, பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது," என்றார். படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.