Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ஒரு வாரத்திற்கு பிறகு ஆர்யா போட்ட ட்வீட் யாரை பற்றி தெரியுமா?
சென்னை : 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யாரையுமே திருமணம் செய்யாமல் நிகழ்ச்சியை முடித்த ஆர்யா, ட்விட்டரில் நடிகர் மாஸ்டர் மகேந்திரனின் லேட்டஸ்ட் வொர்க்-அவுட் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
சரத்குமார் ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்த 'நாட்டாமை' படத்தில் சிறுவனாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். ஒரு பஞ்சாயத்து காட்சியில் 'நான் பாத்தேன்.." என சாட்சி சொல்வபவராக நடித்திருப்பார். அதுதான் அவர் அறிமுகமான படம்.
அதன்பிறகு, நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான மகேந்திரனுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளையும், தெலுங்கு அரசு நந்தி விருதுகளையும் வழங்கியுள்ளது.
'விழா' படத்தில் ஹீரோவாக நடிக்கத்தொடங்கிய மகேந்திரன் அதன்பிறகு ஒருசில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். குட்டிப் பையனாக இருந்த மகேந்திரன் தற்போது பாடி பில்டர் போல காட்சியளிக்கிறார்.
Brother u r king Arnold 💪💪💪💪💪💪😍😍😍😍😍Too good darling 👍Proud of u #dedication https://t.co/v5FKmngUi8
— Arya (@arya_offl) April 20, 2018
ஜிம்மில் வொர்க்-அவுட் செய்து செம ஃபிட்டாக இருக்கிறார் மகேந்திரன். இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 27 வயதாகும் மகேந்திரனை குழந்தை நட்சத்திரமாக நடித்த பையனா இது என பலரும் ஆச்சரியமாகப் பார்த்து வருகின்றனர்.