கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட… கர்ணன் பட வில்லன் !
சென்னை : நடிகர் நட்டி நடராஜன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என கூறியுள்ளார்.
இவர் கர்ணன் திரைப்படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருப்பார்.

ஜனவரியில் தொடங்கியது
கொரோனா 2வது அலை நாடு முழுவதும் சுழற்றியடித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவாக்கின்
இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்கின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளே மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி போட்டுக்கொண்டார்
அந்த வகையில் நட்டி நடராஜன் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இவர், மாரி செல்வன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுக்களையும் பெற்ற கர்ணன் படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்து கலக்கி இருப்பார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

திரைப்பிரபலங்கள்
இந்நிலையில் இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என கூறியுள்ளார். இதுபோல் பல திரைப்பிரபலங்களும் தடுப்பூசிப் எடுத்துக்கொண்டதை பதிவிட்டு வருகின்றனர். இது பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஒரு விழிப்புணர்வாக உள்ளது.


Click it and Unblock the Notifications











