Don't Miss!
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- News லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் "அதிக முறை" சரித்திரம் படைத்தவர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Lifestyle ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தீபாவளி பேஷன் ஷோ - ஒய்யார நடையில் கலக்கிய ஆண்ட்ரியா
சென்னை: நவீன ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு ஃபேஷன் கண்காட்சி ஒன்று நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா உள்பட பல மாடல் அழகிகள் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு ஒய்யாரமாக நடந்து வந்தனர் மாடல் அழகிகள்.
ஆண்ட்ரியா ஜெரெமையா பின்னணி பாடகியாக திரையுலகிற்குள் அறிமுகமாகி பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலம் நடிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வருபம், அரண்மனை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதோடு, திரைப்படங்களில் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பதோடு, சிறந்த பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டில் வெளிவந்த அந்நியன் படத்தில் இவர் பாடிய கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலும், மதராச பட்டினம் படத்தில் இடம் பெற்ற பூக்கள் பூக்கும் தருணம், வானம் படத்தில் இடம் பெற்ற நோ மணி நோ ஹனி போன்ற பாடல்கள் இளைஞர்களிடையே வெகு பிரபலம்.
ஆண்ட்ரியா படங்களில் நடிப்பு, பின்னணி பாடுவதோடு மாடலிங்கும் செய்து வருகிறார். தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி சீசன் என்பதால் நடிகைகளில் பெரும்பாலானோர், படங்களில் நடிப்பதோடு, ஜவுளிக்கடைகளின் விளம்பர படங்களில் நடிப்பதோடு, ஆடைகள் கண்காட்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தீபாவளி நெருங்கி வரும் சூழலில் ஒரு ஆடைகள் கண்காட்சி நிகழ்ச்சி ஒன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தீபாவளி ஸ்பெஷல் கலெக்ஷன் ஆடைகள் புதிய நவீன டிசைன்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அந்த நவீன ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு ஃபேஷன் கண்காட்சி ஒன்று நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா மற்றும் பல மாடல் அழகிகள் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு ஒய்யாரமாக நடந்து வந்தனர் மாடல் அழகிகள்.
இந்த கண்காட்சியில் இடம் பெற்ற அனைத்து ஆடைகளும் மிகவும் ட்ரெண்டியாகவும், ஸ்டைலாகவும் இருந்தன.