Don't Miss!
- News அப்படியே அசத்திட்டாங்களே! கலர் மாறுது காரைக்குடி.. உயர்ந்து நிற்கும் நியோ டைடல் பார்க்.. அப்படி போடு
- Lifestyle புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரஜினி வீட்ல நவராத்திரி விசேஷம்.. ஆட்டம் பாட்டம் அரட்டை என களைகட்டிய வீடு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி பண்டிகை களைகட்டியுள்ளது.
நவராத்திரியை முன்னிட்டு பலரும் கொலு வைத்து இறை வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். சில பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.
பலரும் வீட்டில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடி வருகின்றனர். திரை நட்சத்திரங்களும் தங்களின் வீடுகளில் கொலு வைத்து மூன்று தேவிகளையும் வழிபட்டு நவராத்திரியை கொண்டாடி வருகின்றனர்.
தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக மாறிய அரவிந்த் சாமி
ரஜினி வீட்டில் நவராத்திரி
இந்நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரஜினிகாந்தின் மகள்களான சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
6வது நாள் கொண்டாட்டம்
இதற்காக தங்களின் சிறுவயது தோழிகளான, நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரித்தாவையும் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியான வந்தனாவையும் அவர்கள் நவராத்தியின் 6வது நாளில் தங்களின் வீட்டிற்கு அழைத்து செலிபிரேட் செய்துள்ளனர்.
வரவேற்பு
நான்கு பேரும் கண்கவர் பட்டுப்புடவையில் மிகவும் டிரெடிஷ்னலாகவும் தோன்றினர். நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள வீட்டிற்கு வந்த பிரித்தாவையும் வந்தனாவையும் நடிகர் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் வரவேற்றனர்.
களைக்கட்டிய ரஜினி வீடு
நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் நவராத்திரி விழாவில் பங்கேற்க ரஜினியின் வீட்டிற்கு வந்த பிரித்தா வந்தனா ஆகியோர் ரஜினியுடனும் லதா ரஜனிகாந்துடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.