இந்த பொண்ணு என்னையவே இப்படி கலாய்க்குதே: சந்தானம்
சென்னை: ஊரை எல்லாம் நான் கலாய்க்கிறேன் இந்த பொண்ணு நம்மை போன் போட்டு கலாய்க்கிறதே என்கிறாராம் சந்தானம்.
சந்தானம் படங்களில் மட்டுமின்றி படப்பிடிப்புகளிலும் பிறரை கலாய்த்து வருகிறார். ராஜாராணி படப்பிடிப்பின்போது ஆர்யா, நயன்தாரா, சந்தானம் பேசிக் கொண்டிருப்பார்களாம். அப்போது சந்தானத்திற்கும், நயனுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டதாம். சந்தானத்துடன் பேசிப் பேசி நயனும் கலாய்க்கத் துவங்கிவிட்டாராம்.

படப்பிடிப்பில் கலாய்த்ததோடு மட்டுமில்லாமல் சந்தானத்தை நயன் தொடர்ந்து கலாய்த்து வருகிறாராம். நேரம் போகவில்லை என்றால் நயன்தாரா உடனே சந்தானத்திற்கு போன் போட்டு கலாய்க்கிறாராம்.
இதனால் ஊரில் உள்ளவர்களை எல்லாம் நான் கலாய்க்கிறேன் இந்த பொண்ணு நம்மை இப்படி கலாய்க்கிறதே என்று சந்தானம் கூறுகிறாரம்.
Comments


Click it and Unblock the Notifications