'நயன்தாரா பணத்தை 'ஆட்டயப் போட்டுட்டு' அம்போன்னு விட்டுட்டார் பிரபுதேவா!'

By Shankar

நயன்தாராவிடம் எக்கச்சக்க பணத்தை பிடுங்கிக் கொண்டு, இப்படி அம்போன்னு ஏமாத்திட்டாரே, என பிரபு தேவாவுக்கு நயன்தாராவின் குடும்பத்தினர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா - பிரபு தேவா காதல் அத்தியாயம் முடிந்து, இப்போது துரோகத்தைப் பட்டியலிடும் அத்தியாயம் தொடங்கியுள்ளது.

தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, வேறு பெண்ணுடன் பிரபு தேவா நெருக்கமாகிவிட்டதால் இந்தப் பிரிவு வந்ததாக நயன்தாரா தரப்பு கூறுகிறது.

இந்த திருமணத்துக்காகவே நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்துவாகவும் மதம் மாறினார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரபுதேவா திருமணத்துக்கு தயாராக இல்லை என்பது அவருக்கு முழுமையாகத் தெரிந்ததும், விலகி வந்து சினிமாவில் பிஸியாகிவிட்டார்.

இதற்கிடையில் நயன்தாரா குடும்பத்தினர் பிரபு தேவா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். நயன்தாராவின் ஊரான கேரள மாநிலம் திருவல்லாவில் வசிக்கும் அவரது சித்தி, சித்தப்பா மற்றும் உறவினர்கள் கூறுகையில், "பிரபுதேவா எங்கள் குடும்பத்து பெண் நயன்தாராவை ஏமாற்றி விட்டார். அவள் நாங்கள் தூக்கி வளர்த்த பெண்.

அவள் நிலைமை இந்த அளவு மோசமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நயன்தாராவுக்கு பிடிவாத குணம் அதிகம் என்று சொல்வதெல்லாம் தவறு. அவள் ஒரு அப்பாவி. யாரையும் எளிதில் நம்பி ஏமாந்துவிடுவாள். முதலில் சிம்புவிடம் ஏமாந்தாள். இப்போது பிரபு தேவாவிடம் ஏமாந்து போனாள்.

சிம்பு 'சுட்ட' பணம்!

சிம்பு வல்லவன் படம் எடுத்த போது பண நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அவருக்கு நயன்தாரா உதவினார். ஆனாலும் சிம்பு ஏமாற்றி விட்டார்.

அவரை பிரிந்து பிரபுதேவாவிடம் வந்ததும் இனியாவது சந்தோஷமாக இருப்பாள் என்று எதிர்பார்த்தோம். இங்கும் அவள் நிலைமை பரிதாபமாகி உள்ளது. பிரபுதேவாவை நயன்தாரா ரொம்ப நம்பினாள்.

'ஆட்டயப் போட்ட' பிரபு தேவா!

ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்வதற்கு பணம் தந்தது யார் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்துக்காகவும் நயன்தாரா பணம் பறி போனது. அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது.

எல்லா பணத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டனர். இப்போது எதுவும் இல்லை என்று தெரிந்ததும் கழற்றி விட்டுவிட்டார்கள். நயன்தாரா சினிமாவை விட்டு வந்தால் எங்கள் குடும்பத்திலேயே நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க தயாராக உள்ளோம்," என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X