'சக்சஸ் மீட் வேண்டாம்'... நன்றி மறந்தாரா நயன்தாரா?
காத்திருந்து வென்று காட்டிவிட்டார் நயன்தாரா. அறம் படத்துக்கு ரிலீஸாவதற்கு முன்னர் நெகட்டிவ் இமேஜ்தான் அதிகமாக இருந்தது. முக்கியமாக படம் ரொம்ப சீரியஸாக இருக்கிறது என்று வாங்க யாரும் முன்வரவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பின்னர்தான் ரிலீஸ் செய்தார் நயன்.
நல்ல படம் என்பதால் மீடியாக்கள் தூக்கி பிடிக்க படம் ஹிட் அடித்துவிட்டது. அப்படி தூக்கிப் பிடித்த மீடியாக்களுக்கு நேரில் ஒரு நன்றி சொல்ல வேண்டுமே? அதற்கு இன்னும் மனம் வரவில்லை நயனுக்கு.

சக்சஸ் மீட் வைக்கலாம் என்று சொன்ன யோசனையை நிராகரித்து விட்டாராம். சக்சஸ் மீட்டுக்கு நயன் வர வேண்டியிருக்கும். அது தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கும் என்று வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
இதுவரை ஒரு நன்றி கூட சொல்லவில்லை நயன்தாரா. ஆனால் மீடியாக்கள் எல்லாம் நயனை கொண்டாடி வருகிறார்கள்.
ட்விட்டர்ல கூடவா சொல்லக்கூடாது?


Click it and Unblock the Notifications











