Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினி, த்ரிஷா, நயன்தாரா - பிரபலங்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் அத்திவரதர்
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய சினிமா பிரபலங்கள் வரிசை கட்டினர். இந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம்: அத்திவரதா வரம் தா என்று ஏராளமான பிரபலங்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் இரு தினங்களக்கு நள்ளிரவில் அத்திவரதரை சிறப்பு தரிசனம் செய்தார். த்ரிஷாவும் அத்திவரதரை தரிசனம் செய்தார். அதை எல்லாம் விட நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசனம் செய்ததுதான் ஹைலட். சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார். அத்திரவரதரின் படமும், பிரசாதமும் நயன்தாராவிடம் கொடுக்கப்பட்டது. நயன்தாரா அத்திரவரதரை தரிசிக்க வந்ததை பார்த்த பக்தர்கள் ஆளாளுக்கு அவரை செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
நயன்தாராவை பார்த்ததில் அர்ச்சகர்கள் முகத்தில அத்தனை சந்தோஷம் அது தப்பில்ல ஏன்னா அவங்களும் மனிதர்கள் தானே ஆனா அத்தி வரதர கொஞ்சம் உத்துப் பாருங்களேன் அன்னை சீதா பிராடரடியாரையே நேரில் பார்த்த சந்தோஷம் அத்திவரதருக்கு என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
அத்திவரதர்
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து, எடுக்கப்பட்டு, கடந்த 48 நாட்களாக, பெருவாரியான பக்தர்களுக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அருள்பாலித்து வந்தார் அத்திவரதர். இன்றுடன் அத்திவரதர் தரிசனம், முடிவடைய உள்ளதை ஒட்டி, அதிக அளவில், பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்து வருகிறார்கள். மேலும் நாளைய தினம் மீண்டும் அத்தி வரதரை மந்திரங்கள் முழங்க, குளத்தில் வைக்க உள்ளனர் அச்சகர்கள்.
லட்சக்கணக்கான பக்தர்கள்
அத்திப்பூத்தாற் போல் 40 ஆண்டுகளுக்கு பின்னர் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தந்து வரும் அத்திவரததை 31 நாட்கள் சயனக்கோலத்திலும் இன்று வரை நின்ற கோலத்திலும் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் அத்திவரதரை நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து நெரிசலில் சிக்கி பெரும் பாடுபட்டு அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
விஐபிக்கள் தரிசனம்
இந்நிலையில் இன்றோடு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான அனுமதி நிறைவடையும். பல லட்ச கணக்கான பக்தர்கள் அவதிப்பட்டு அத்திவரதரை ஒருமுறை தரிசித்து விடமாட்டோமா என்று ஏங்கி கொண்டிருக்கையில் பல விஐபி, விவிஐபிகள் அத்திவரதரை நள்ளிரவில் தரிசித்து வருகின்றனர். சாமானிய மக்கள் அவதிப்பட்டு ஸ்வாமி தரிசனம் செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். அங்கு உள்ள அர்ச்சகர்கள் அத்திவரதரை வைத்து வியாபாரம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. விஐபி, விவிஐபிகளுக்கு மட்டும் நள்ளிரவுகளில் ஸ்பெஷல் தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
நயன்தாரா விக்னேஷ் சிவன்
நடிகர் ரஜினி காந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் நேற்று முந்தினம் சென்று தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மாற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். நடிகை நயன் தாரா அத்திவரதரை நன்றாக தரிசனம் செய்தாரோ இல்லையோ நம் கோயில் அர்ச்சகர்கள் நள்ளிரவில் எழுந்தருளிய அம்பாளை நன்றாக தரிசனம் செய்தனர்.
வைரலான நயன்தாரா
புகைப்பங்கள் என்ன, செல்ஃபீகள் என்ன என்று களைகட்டியது அருகில் நம் அத்திவரதர். இப்படி ஒரு தரிசனம் கிடைக்க அவர் அத்திவரதரிடம் தான் வரம் பெற்றிருக்க வேண்டும். இந்த புகைப்படம் ஒரு வைரலாகி கிழிகிழி என்று கிழித்துவிட்டது. என்ன கொடுமை சார் இது! நயன்தாராவை தரிசித்த அர்ச்சகர்கள் பக்கத்தில் அத்திவரதர் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
ரித்விகா ஜனனி ஐயர்
இவரை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற, நடிகை ரித்விகா மற்றும் ஜனனி அய்யர் ஆகியோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படத்தை அவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். சாமான்ய மக்களுக்கு மட்டுமல்ல பிரபலங்களின் ப்ராப்ளங்களையும் அத்திவரதர்தான் தீர்க்கவேண்டும் போல. வரதா வரம் தா என்று பலரும் வேண்டிக்கொள்வது அந்த அத்திவரதரின் காதுகளில் விழாமல் இருக்குமா என்ன.