Just In
- 12 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 12 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 14 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 15 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
- Automobiles
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விக்னேஷ் சிவன் கையை பிடித்தபடி.. செம ஸ்டைலாக வரும் நயன்தாரா.. வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கைகோர்த்தபடி விமான நிலையத்துக்கு வரும் போட்டோஸ் வைரலாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
இந்த சீசன்ல பிக்பாஸே செம ஃபார்ம்ல இருக்கார் போல.. தூங்கிய ஹவுஸ்மேட்ஸை எப்படி எழுப்புனாரு பாருங்க!
நாயகிகளாக குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

ரஜினி அரசியல்
கொரோனா பரவலுக்கு முன்பே இதன் ஷூட்டிங் தொடங்கி 40 சதவீதம் முடித்து விட்டது.அடுத்த மாதம் தனிக் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் தயாராகி வருவதால் அதற்கு முன், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிவிடும்படி ரஜினி கூறியிருந்தார். இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.

கொரோனா பாதுகாப்பு
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். சில தினங்களுக்கு பிறகு நயன்தாராவும் கலந்து கொண்டார். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாகக் கடைபிடித்து இதன் ஷூட்டிங்கை தொடங்கினர்.

படப்பிடிப்பு ரத்து
இருந்தும் பட யூனிட்டில் உள்ள 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வழக்கம் போல, படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது இது தெரியவந்தது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தொற்று இல்லை
ரஜினிகாந்துக்கும், மற்ற படக் குழுவினருக்கும் தொற்று இல்லை என்றாலும் ரஜினிகாந்த் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். மற்ற நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், இதன் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா நேற்று சென்னை திரும்பினார்.

கைகோர்த்தபடி
காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்தபடி ஐதராபாத் விமான நிலையத்துக்கு இருவரும் ஒன்றாக வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்கிறாக அங்கு சென்றிருந்த விக்னேஷ் சிவன், சமந்தா, விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை படமாக்கினார். அதை முடித்துவிட்டு நயன்தாராவுடன் நேற்று சென்னை திரும்பினார்.