நான் நேற்று சென்னையில் இல்லாமல் போயிட்டேனே: புலம்பும் நயன்தாரா ரசிகர்கள்
சென்னை: தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடித்த அறம் படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடுகிறது. படத்தை பார்ப்பவர்களால் இயக்குனரையும், நயன்தாராவையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
துளியும் கவர்ச்சி காட்டாமலும் தன்னால் ஜெயிக்க முடியும் என்று நயன்தாரா நிரூபித்துள்ளார்.

நயன்தாரா
நயன்தாரா தனது அறம் படம் ஓடும் சென்னை காசி தியேட்டர் உள்ளிட்ட சில தியேட்டர்களுக்கு நேற்று சென்றார். அறம் பட கெட்டப்பிலேயே சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மகிழ்ச்சி
கலெக்டர் மதிவதனி கெட்டப்பில் நயன்தாராவை தியேட்டர்களில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நயன்தாராவும் அவர்களை பார்த்து சிரித்தபடியே கையசைத்தார்.

சென்னை
நயன்தாரா சென்னை தியேட்டர்களுக்கு சென்ற விபரம் அறிந்த பிற பகுதி ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்த நேரம் நான் சென்னையில் இல்லாமல் போய்விட்டேனே என்று ஃபீல் பண்ணியுள்ளனர்.

வேண்டும்
அறம் படத்தை பார்த்தவர்கள் நிஜத்திலும் மதிவதனி போன்ற பல அதிகாரிகள் வேண்டும் என்று தங்களின் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











