Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஸ்ட்ரைக் நடைபெறும்போது ரிலீஸ் ஆகும் நயன்தாரா படம்!
Recommended Video
சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் காலவரையற்ற ஸ்ட்ரைக் நடத்தி வரும் நிலையில், புதிய படங்கள் எதுவும் இந்த மாதம் முழுவதும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில் வரவேற்பு உருவாகியுள்ளது. இதைப் பயன்படுத்தி மற்ற மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த 'புதிய நியமம்' என்ற படம் தற்போது 'வாசுகி' என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 29-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டப்பிங் படம் என்பதால் இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் இருக்காது.
பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும் அயோக்கியர்களுக்கு பாரபட்சமின்றி மரணத்தை பரிசளிக்க வேண்டும் என்பது தான் 'புதிய நியமம்' படத்தின் கதைக் கரு. இப்படத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த மூவரை நயன்தாரா எவ்வாறு கொலை செய்கிறார் என்பதை திரில்லர் ஸ்டோரியாக சொல்லப்பட்டுள்ளது.
இப்படத்தை சாஜன் என்பவர் இயக்கியிருந்தார். புதிய படங்கள் வெளியாகததால் ஏற்கெனவே மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தை டப்பிங் செய்து தமிழ், தெலுங்கில் வெளியிட இருக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.