twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவையில் உதயநிதியுடன் நயன்தாரா.. பார்க்கக் கூடியது பெருங்கூட்டம்!

    By Shankar
    |

    Nayanthara in Coimbatore
    இது கதிர்வேலன் காதலி படத்தின் ஷூட்டிங்குக்காக கோவை வந்த நயன்தாராவைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படம் கதிரவனின் காதலி. சுந்தர பாண்டியன் படம் தந்த எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    பீளமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. திங்கள் கிழமை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள பூங்காவில் படப்பிடிப்பு நடந்தது.

    பூங்காவில் நயன்தாரா கோபமாக அமர்ந்திருப்பது போலவும், அவரை உதயநிதி ஸ்டாலின் சமாதானம் செய்து பேசுவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது.

    நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்ட ஏராளமான பொதுமக்களும் ரசிகர்களும் அந்த பகுதியில் குவிந்துவிட்டனர்.

    இவர்களின் ஆர்வத்தால், நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    English summary
    A large number of public gathered near Coimbatore race course road to have a glimpse of actress Nayanthara and Udayanidhi during the shooting of Ithu Kathirvelan KIadhali.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X